Princiya Dixci / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகளை முன்வைத்தது, 'உரிமைகளை வென்றெடுப்போம்' எனும் தொனிப்பொருளில், நீர்கொழும்பு நகரில் இன்று (20) காலை ஒருநாள் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் , நீர்கொழும்பு நகர மத்தியில் ஸ்டேசன் வீதி அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
எதிர்ப்பு நடவடிக்கையின் போது, சகல காணாமலாக்கள்களையும் வெளிப்படுத்தல் வேண்டும், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், வடக்கு, கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்தல் வேண்டும் மற்றும் மீதொட்டமுல்லயில் குப்பை மேடு சரிந்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு உரிமைகள் தொடர்பாக அங்கு வலியுறுத்தப்பட்டது.
(படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago