Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாத்மா காந்தி அடிகளாரின் 149ஆவது ஜனன தினம், மட்டளக்கப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவில் இன்று (02) நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தின் போது, காந்தி அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், கே.எல்.ரி.யுதாஜித்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 May 2025
18 May 2025