2025 ஜூலை 30, புதன்கிழமை

அசேல குணரத்ன, சீகுகே பிரசன்னவுக்கு பதவியுயர்வு (UPDATE)

George   / 2017 மார்ச் 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் இராணுவ வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோரின் திறமையை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் சென்விரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்

அற்கமைய, சீகுகே பிரசன்ன அதிகாரி தரம் 1க்கும், அசேல குணவர்தன, அதிகாரி தரம் 2க்கும் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இராணுவத்தில் இருந்த பிரிவில் அதிகூடிய நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .