2025 ஜூலை 31, வியாழக்கிழமை

காலிமுகத்திடலில்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று (04) காலை இடம்பெற்றது.

'தேசிய ஒற்றுமை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பும் பட உதவியும்: வருண வன்னியாராச்சி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .