2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கச்சதீவு புதிய ஆலய திறப்பு விழா...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம், வெள்ளிக்கிழமை (23) காலை 8.30க்கு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளால் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட குரு முதல்வர்  பத்திநாதன் ஜோசப் ஜெபரட்ணம், யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம், நெடுந்தீவு பங்குத்தந்தை அ.ஜெ.அன்ரனி ஜெயரஞ்சன், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, காங்கேசன்துறை கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் பியால்.டி.சில்வா யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல்  ஆ.நடராஜன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .