2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்…

Princiya Dixci   / 2022 மே 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வெளிச்சியுடன் இன்று (18) நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற  இந்நிகழ்வில்,  இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனைய உறவுகளும் சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, முள்ளிவாய்க்கால்  பிரகடனமும் வெளியிடப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும்   வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் - சண்முகம் தவசீலன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .