Princiya Dixci / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தின் முசலி மக்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை அடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்துவரும் வடபுல முஸ்லிம் மக்கள், வெள்ளிக்கிழமை (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் நுரைச்சோலை கொய்யாவாடியில் வாழும் வடபுல முஸ்லிம்கள், ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கொய்யாவாடி அல் முனவ்வர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு - ரஸீன் ரஸ்மின்)


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago