2025 மே 23, வெள்ளிக்கிழமை

கைதிகளின் மனிதாபிமானம்: தயாராகிறது உணவு

Editorial   / 2017 மே 30 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள், இன்றைய தினம் (30) தங்களது பகலுணவை எடுத்துக்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர்.

சுமார் மூவாயிரம் பேர் அடங்கிய இந்தச் சிறைக்கைதிகள், தங்களது பகலுணவை, அனர்த்தங்களுக்கு இலக்காகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கைதிகளின் இந்தத் தீர்மானத்தை மதிக்கும் வகையில், அவர்களுடைய மூவாயிரம் உணவுகளுடன் இன்னும் மூவாயிரம் உணவுப் பொதிகளைச் சேர்த்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் ஹிந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்த உணவுப் பொதிகளை விமானப் படையினரின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக, உணவு தயாரிக்கப்பட்டு, பார்சல்கள் செய்யப்படுவதைப் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X