Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

முந்தல், பத்துளுஓயா உடப்பு சந்தியில் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பஸ் நடத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனரென, உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், குருநாகல் வீதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய எரங்க கிரிசாந்த் பர்ணான்டோ ( வயது 34) என்பவரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து சிலாபம், உடப்பு நோக்கிச் சென்ற சிறிய லொறியொன்றும் மோதியதில், இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
(படங்கள்: முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின், க.மகாதேவன்)


5 minute ago
8 minute ago
15 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago
27 minute ago