Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் நினைவாக மட்டக்களப்பு, குருக்கள்மடத்தைச் சேர்ந்த 'சுனாமி பேபி 81' ஜெயராசா அபிலாஷின் இல்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி இன்று (26) திறந்து வைக்கப்பட்டது.
சுனாமி அனர்த்தத்தின்போது, பிறந்து இரண்டரை மாதங்களேயான அபிலாஷ் என்ற குழந்தை காணாமல் போய் மீட்கப்பட்ட நிலையில், அக்குழந்தையை பலர் தமது குழந்தை என்று உரிமை கோரினர்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அக்குழந்தை ஜெயராசா தம்பதியினரின் குழந்தை அடையாளம் காணப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் 'சுனாமி பேபி 81' இச்சிறுவன் அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

30 minute ago
35 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
36 minute ago
51 minute ago