2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூரில் மாநாடு…

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள், சுற்றாடல் நிறுவன தலைவர்கள் மாநாடு, ஜனாதிபதி மைத்jpரிபால சிறிசேனவின் தலைமையில், சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் இன்று (25) ஆரம்பமானது.

“சுற்றாடல் சவால்கள், பேண்தகு பயன்பாடு மற்றும் உற்பத்திக்கான செயற்திறன்மிக்க தீர்வுகள்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 40 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், அந்நாடுகளின் சுற்றாடல் அமைச்சர்களும் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சிங்கப்பூர் பிரதிப் பிரதமர் Teo Chee Hean, துவாலு நாட்டின் பிரதமர் Enele Sosene Sopoaga ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X