Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பிரதேசத்தில் உள்ள கிராமிய அனர்த்த உதவிக் குழுக்களுக்கான தலைமைத்துவத் திறன் விருத்தி நிகழ்வொன்று, “அம்கோர்” அமைப்பின் ஏற்பாட்டில், ஒந்தாச்சிமடம் கடற்கரையில் நேற்று முன்தினம் (01) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகள், கடற்கரை மணலில் உருவங்கள் செய்தும் அப்பகுதியில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு, கிராம மட்டத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை தத்ரூபமாக செயன்முறை வடிவில் எடுத்தியம்பினர்.
(படப்பிடிப்பு: வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)





5 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
09 May 2026
09 May 2026