2025 மே 24, சனிக்கிழமை

தணிக்கை தகர்க்கும் தனிக்கை...

Princiya Dixci   / 2017 மார்ச் 18 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் மிரர்' பத்திரிகை மற்றும் இணையம் ஆகியவற்றின் ஆசிரியர் ப.மதனவாசனின் (ஏ.பி.மதன்) 'தணிக்கை தகர்க்கும் தனிக்கை' என்ற நூலின் முதல் பிரதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நேற்று மாலை வெளியிட்டு வைத்தார்.

கொழும்பு – 10, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், நேற்றுமாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வு, 'காலைக்கதிர்' பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் தலைமையிலும் டெக்கான் குரோனிக்கலின் (இந்தியா) நிறைவேற்று ஆசிரியர் பஹ்வான் சிங்கின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X