2025 மே 24, சனிக்கிழமை

புத்தாண்டு சுபநேர அட்டவணை கையளிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் அடங்கிய அட்டவணையினை, பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (11) நடைபெற்றது.

உள்ளக விவகாரங்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன, அமைச்சின் செயலாளர் டீ. ஸ்வர்ணபால ஆகியோரால், சுபநேர அட்டவணை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

புத்தாண்டு உதயம், புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு தயாரித்தல் மற்றும் உணவுட்கொள்ளல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் புதிய வருடத்தில் தொழிலுக்கு புறப்பட்டுச் செல்லல் போன்ற புத்தாண்டு பாரம்பரியங்களுக்கான சுப நேரங்கள், இந்த சுபநேர அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X