2025 மே 19, திங்கட்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள், இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்து வைக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு, இதன்போது மாணவர்கள் வலியுறுத்தினர்.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பி.இந்துஜன் தலைமையில், மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கிழக்குப் பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்னால், நிறுவக மாணவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X