Editorial / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதல் மருத்துவ பேராசிரியாராக பட்டம்பெற்ற வைத்திய பேராசிரியர் மகேசன் உமாகாந்தன், சுகாதார சேவைகள் வைத்தியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு , மட்டக்களப்பு பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையின் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் ஆகியோரும் பங்கேற்றினர்.
அத்துடன், மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலை பணிப்பாளர்களான, வைத்தியர்.எம்.எஸ்.எம். ஜாபீர், வைத்தியர் புவநேந்திரநாதன், வைத்தியர் எரங்க ராஜபக்ஷ, வைத்தியர் திருமதி ரி. சசிகலா, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதரா பணிப்பாளர்களான வைத்தியர்கள் மற்றும் ஆரம்ப சுகாராத வைத்தியசாலை பணிப்பாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு பொன்னாடைபேர்த்தி நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்தனர். (கனகராசா சரவணன்)






48 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026