Freelancer / 2023 ஜூலை 03 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌத்த கண்காட்சி
இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராமை விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது.


அறிவு, வழிகாட்டல் மற்றும் ஞானம் ஆகியவற்றைத் தரும் ஆன்மீக நெறியாளர்கள் அல்லது குருமாரைக் கௌரவிக்கும் முகமாக இந்தியாவில் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா பண்டிகைக்கு சமாந்தரமாக எசல போயா தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இப்போயா தினத்திலேயே இந்தியாவின் சர்நாத்தில் புத்தபெருமான தனது முதலாவது பிரசங்கத்தை நடத்தியிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .