2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்கம்பத்துடன் மோதி...

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கும்புறுமூலைக் கிராமத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரிலிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இம்முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளானது.
இதில் வாழைச்சேனை விபுலாநந்தபுரத்தைச் சேர்ந்த சின்னையா தருமராசா (வயது 56), இராஜேந்திரன் சுஜன் (வயது 16), அபேவர்தன ஜெயலெட்சுமி (வயது 69) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .