2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மூன்று டிப்பர்கள் விபத்து...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, பழைய முறிகண்டிப் பகுதியில் மூன்று டிப்பர்கள், இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை விபத்துக்குள்ளாகியதில், ஒரு டிப்பர் குடைசாய்ந்து, அதன் சாரதி காயமடைந்துள்ளதாக  மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முதலில் இரண்டு டிப்பர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அவ்வேளையில் பின்னால், வந்த டிப்பர் விபத்துக்குள்ளான ஒரு டிப்பரை மோதித் தள்ளியுள்ளது. இதில் மணல் ஏற்றிச் சென்ற ஒரு டிப்பர் குடைசாய்ந்துள்ளது. (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X