Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று (14) விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மாவட்ட மேலதிக அரசாங்க செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் ஆகியோர் தலைமையில் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் வைத்து இந்த வரவேற்பளிப்பளிக்கப்பட்டது.
இதன்போது இந்திய உயஸ்தானிகர், மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.
இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், உயஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.
(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025