2025 மே 16, வெள்ளிக்கிழமை

யானைகள் படையெடுப்பு...

J.A. George   / 2021 மார்ச் 19 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக, நூற்றுக்கணக்கான யானைகள் கூட்டம், மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (18) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு, மாவடிப்பள்ளி, நிந்தவூர் பகுதிகளை ஊடறுத்து,  ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 188க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி, அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக   துரித  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது. 

அன்று மாலை முதல் இரவு வரை யானைகள் நகர்ந்து செல்லாமல் ஓர் இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது  யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக  வனவிலங்கு அதிகாரிகள்  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .