Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 11 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
டயகமையிலிருந்து கொழும்புக்கு, இருப்பத்து ஆறாயிரத்து 730 கிலோகிராம் தேயிலைத்தூளை ஏற்றிச் சென்ற கனரக லொறி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, வுட்லேன்ட் பகுதியில், இன்று அதிகாலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அவ்வீதி வழியான போக்குவரத்து சுமார் 6 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தினால், எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால், நோட்டன் பிரிட்ஜ் வழியாகவே, போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டதாகவும் இன்றுக் காலை 8 மணியளவிலேயே, லொறி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால், பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமையால், அரச ஊழியர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும், பல சிரமங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
9 hours ago