2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்தின் கோரம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கத்தான்குடிப் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர்  படுகாயமடைந்துள்ளனர்

கல்முனைப் பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று, ஓடுகளை இறக்குவதற்காக மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதான வீதியோரத்தில்; நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.இதன்போது, அருகிலிருந்த மின் இணைப்புத்தூனும் சேதமடைந்துள்ளது. 

இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் நடத்துநரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இவர்களில் ஒருவர்; மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X