2025 மே 23, வெள்ளிக்கிழமை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்...

George   / 2017 ஜூன் 12 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு, காலை ஐந்து மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.

அதன்பின்னர் ஆலய பூசகர்கள், கச்சிநேரும் நிகழ்வு நடைபெற்று,  பூசைக்குரிய தூளி பிடிக்கும் நிகழ்வும் பின்னர், காலை ஏழு மணியில் இருந்து பூசைகள் இடம்பெற்றன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழாவில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X