Freelancer / 2021 ஜூன் 13 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,காரைதீவு, சம்மாந்துறையில் உள்ள வீதி சமிஞ்சைகள் புனரமைப்பு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முகமாகவும் பாதசாரிகளின் நலன் கருதி இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியினூடாக பயணம் செய்பவர்களை மிக அவதானத்துடன் செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை பதாதை மூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கொரோனா அனர்த்தம் கல்முனை பிராந்தியத்தில் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில்,வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இவ்வாறான செயற்பாட்டினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனமும் தொழிநுட்ப ரீதியாக, இச்செயற்பாட்டிற்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
M
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026