2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

2ஆவது போட்டியில் சமின்ட எரங்க இல்லை

A.P.Mathan   / 2014 ஜூலை 22 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமின்ட எரங்க, உபாதை காரணமாக விளையாடமாட்டார். 
 
முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் களத்தடுப்பில் ஈடுபட்ட வேளையில் ஆட்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கு எட்டு தையல்கள் போடப்பட்டன. இதன் காரணமாகவே இரண்டாவது போட்டியில் சமின்ட எரங்க விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  
 
இலங்கை அணி சார்பாக 2014ஆம் ஆண்டு கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றிய வீரர் சமின்ட எரங்க. இவர் விளையாட முடியாத நிலையில் தம்மிக்க பிரசாத் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
ஜூலை மாதம் 24ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .