2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இந்தியா, இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஜூலை 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்து, சொவ்தம்ப்டன் ரோஸ்போல் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. தொடரில் 1 - 0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் இருக்கின்றது. அழுத்தத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி தன் மீள் வருகையினை காட்ட போராடி வருகின்றது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று விட்டால் தொடர் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். எனவே தீர்மானப் போட்டியாக இந்தப் போட்டி அமையவுள்ளது. 
 
இங்கிலாந்து அணி சார்பாக அதன் விக்கட் காப்பாளர் மத் ப்ரையர் அணியில் இருந்து விலகியுள்ளார். ஜோஸ் பட்லர் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார். சகலதுறை வீரர் பென் ஸ்டோக்க்ஸ் ஓட்டங்களை பெற தவறி வருகின்றமையினால் க்றிஸ் ஜோர்டான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. லியாம் பிளங்கட்டிற்கு ஓய்வு வழங்கப்பட்டு க்றிஸ் வோக்ஸ் அணியில் இணைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. 
 
இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா, ஸ்டுவோர்ட் பின்னிக்கு பதிலாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இதுவாகும். இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதற்ப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு சமநிலையில் நிறைவடைந்தது. இங்கிலாந்தின் வேகமான ஆடுகளங்களில் முக்கிய ஆடுகளமாக இதுவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .