A.P.Mathan / 2014 ஜூலை 30 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் தலை சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜக்ஸ் கலிஸ் தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று இருந்த இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் வரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் நோக்கில் இருந்தார். இருப்பினும் அண்மைக்காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் இவருக்கு இடம் வழங்கப்படவில்லை. உலகக்கிண்ணத்திற்கு தயார் செய்யும் நோக்கில் இலங்கை தொடரில் இவருக்கு இடம் வழங்கப்பட்டது. ஓட்டங்களைப் பெற ஜக்ஸ் கலிஸ் தடுமாறியதுடன் அணியில் இடத்தை தொடர்ந்து தக்க வைக்கக் கூடிய அளவில் ஓட்டங்களைப் பெறவும் இல்லை. இந்த நிலையில் தான் சகலவித சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago