2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கான நுழைவுச் சீட்டு பணம் மீள வழங்கப்படும்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த  இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்கள் அதற்கான பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளமுடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் ஊடக முகாமையாளர் ரஜித்த பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல், 10 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் 4 மணி வரை எஸ்.எஸ்.சி மைதானத்தில் அமைந்துள்ள இலங்கை கிரிக்கெட் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான அனுமதி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

பிரதான பார்வையாளர் மண்டபம், அதி உயர் பார்வையாளர் மண்டபம் ( Grand Stand ) தவிர்ந்த அனைத்து பகுதிகளுக்கும் இலவசமாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .