2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

டங்கன் பிளட்ஷர் திறமையானவர்: ரவி சாஸ்திரி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாலராக டங்கன் பிளட்ஷர், தொடர வாய்ப்புகள் உள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் மோசமான டெஸ்ட் தொடரையடுத்து அணியின் பணிப்பாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்திய அணி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான மீள் வருகையைக் காட்டி ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றது.   
 
நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அணியில் எனக்கு கிடைத்தது. இங்கிலாந்தில் வைத்து யாரும் இங்கிலாந்து அணியை 3 இற்கு 1 என வெற்றி பெற முடியாது. அதுவும் மோசமான டெஸ்ட் தொடருக்கு பின்னதாக. அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளட்ஷர் அடங்கலாக பயிற்றுவிப்பாளர் குழு சிறப்பாக உள்ளது. அவர்களும் இந்த வெற்றிக்கு காரணம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 
 
ரவி சாஸ்திரியின் அறிக்கை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு வழங்கப்பட்ட பின்னரே டங்கன் பிளட்சரின் பதவி பற்றி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரவி சாஸ்திரி, பிள்ட்ஷர் அணியில் தந்தை என்ற நிலையில் உள்ள்ளார். நல்ல மனிதர். ஊடகங்கள் எதையும் சொல்லிவிட்டு போகட்டும் என கூறியுள்ளது அவர் தொடர்ந்தும் இந்திய அணியின் பயிற்றுவிப்பாலராக தொடர்வார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .