2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சங்கா, மஹெலவை கூட்டங்களில் சேர்க்கக்கூடாது: சனத்

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் கூட்டங்களில் பேசிய முக்கிய விடயங்களை ஊடங்களுக்கு கூறியுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் குமார் சங்ககார, தான் ஓய்வை எதிர்பார்க்கவில்லை எனவும் அணி தோல்வியில் செல்லும் வேளையில் தொடரின் இடை நடுவே விலகுவது தனக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

மஹேல ஜெயவர்தன தான் உலகக்கிண்ணதுக்;கு முன்னராக ஆரம்ப துடுப்பாட்ட வீராக விளையாட விரும்புவதாகவும் மத்திய வரிசை அனுபவம் இல்லாமல் இருப்பதால் தன்னை மத்தியவரிசையில் துடுப்பாடுமாறு தெரிவுக் குழுவினர் கோருவதாகவும் ஊடங்களுக்கு தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்தே சனத் ஜெயசூரிய குறித்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ள அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அணித்தலைவர், பயிற்றுவிப்பாளர் ஆகியோருடன் நடந்த கூட்டத்துக்;கு சிரேஷ்ட வீரர்கள் என்ற அடிப்படையில் அவர்களை அழைத்ததாகவும் கூறியுள்ள சனத், எதிர்வரும் காலங்களில் இவர்களை கூட்டங்களில் சேர்க்காமல் விட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அத்துடன் இவர்கள் இருவரும் செய்துள்ள விடயம் பிழையான முன் மாதிரியாக அமைந்துள்ளது.   நாங்கள் பேசிய விடயங்களை, ஊடங்களில் கூறினால் எங்களுக்கு அது பெரிய சங்கடமான நிலையை  உருவாக்கும்.   துடுப்பாட்ட வீரர்கள் எங்கே துடுபாட வேண்டும் என தீர்மானிப்பது தெரிவுக்குழுவினரே தவிர வீரர்கள் அல்ல.

வீரர்கள் எங்கள் வேலையை செய்தால் நாங்கள் ஏன் என சனத் ஜெயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

ங்ககார, தம்மிக்க பிரசாத் ஆகியோரை இறுதி இரண்டு போட்டிகளில் இணைக்காமல் ஓய்வு வழங்குவது என, அணி அறிவிக்கும் போதே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

இதை நான் அவருடன் பேசும் போதும் அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என தெரிவித்த சனத் ஜெயசூரிய, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடானா தொடர் வருகின்றது. சிரேஷ்ட வீரர்களை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .