2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நான் துடுப்பாட்ட வீரனே: ஹபீஸ்

A.P.Mathan   / 2014 நவம்பர் 20 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் பந்துவீச்சு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹபீஸ், தான் துடுப்பாட்ட வீரனே எனக் கூறியுள்ளார். தன்னை ஒரு பந்துவீச்சாளராக தான் நினைக்கவே இல்லை எனக் கூறியுள்ளார். தான் எப்போதும் தனது துடுப்பாட்டத்திலேயே அக்கறை செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டியிலேயே இந்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டது. அடுத்த போட்டியில் விளையாடக் கூடிய நிலை இருந்தும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
உபாதை காரணமாகவே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ள போதும் இந்த காரணத்திற்காகவே விடுவிக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது. என்னால் ஓரளவு மாற்றங்களை செய்து பந்து வீச முடியும். அது அணிக்கு கை கொடுத்துள்ளது. நான் மீண்டும் சாதாரணமான கிரிக்கெட் விளையாடும் நிலையில் மீள வருவேன் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .