2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மீண்டும் பந்துவீச முடியும்: அஜ்மல்

A.P.Mathan   / 2015 ஜனவரி 25 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல், நேற்று இந்தியாவின் சென்னையில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சோதனையை தொடர்ந்து தனது தூஸ்த்ரா பந்துவீச்சு அடங்கலாக அனைத்துவித பந்துவீச்சுகளும் கடுப்பாட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, தான் மீள பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுளார். தான் நம்பிக்கையோடு இருப்பதாகவும் முடிவு அவர்களின் கைகளிலேயே இருப்பதாகவும் சைட் அஜ்மல் மேலும் தெரிவித்துள்ளார். 

சைட் அஜ்மலின் பந்துவீச்சு விதிமுறைகளை தாண்டி இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் எந்திர உயிரியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் படி விதிமுறைகளை தாண்டி அவர் பந்துவீசுவது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இவர் பந்துவீச முடியாமல் தடைசெய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உதவியுடன் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்டாக்கின் உதவியுடன் தனது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து கொண்டார் அஜ்மல். இதற்கு முதல் ஒருதடவை சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் பரிசோதனைக்கு கோரி பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த திகதியை பிற்போட்டுக் கொண்டது. 

இந்த நிலையில் நேற்று சோதனை செய்துகொண்ட அஜ்மலின் பந்துவீச்சு மாற்றங்கள் அடைந்து 15 பகை கோணத்திற்கு உட்பட்டு இருந்தால், அவர் மீண்டும் பந்துவீச அனுமதி வழங்கப்படும். தவறும் பட்சத்தில் ஒரு வருடம் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை அஜ்மல் பந்துவீச முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு நடைபெற்றால் 37 வயதான அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .