2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் வீரரின் அறையில் இயல்நிலை அற்றவர்

A.P.Mathan   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கி உள்ள ஹோட்டலில், பாகிஸ்தான் சகலதுறை கிரிக்கெட் வீரர் ஹரிஸ் சொஹைலின் அறைக்குள் இயற்கையை தாண்டிய ஒருவர் வந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வீரர்கள் ஹரிஸ் சொஹைலின் அறைக்கு சென்ற வேளையில் அவருக்கு இந்த சம்பவம் காரணமாக கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் முகாமைத்துவம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியா அவரின் அறை, ஹோட்டல் நிர்வாகத்தினால் மாற்றப்பட்டுள்ளது. 

உலகக்கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தில் பயிற்சிப்போட்டிகளிலும், நியூசிலாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் விளையாடவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .