2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை

A.P.Mathan   / 2015 ஜனவரி 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விதிமுறைகளுக்கு முரணாகப் பந்துவீசுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டதால் பந்துவீசுவதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அஜ்மல், வரும் 24ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி.யின் பந்துவீச்சுப் பரிசோதனையில் பங்குகொள்கிறார்.

இந்தப் பரிசோதனைக்கு கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அஜ்மல் முழுமையாகத் தயாராகாததால், திகதியை பின்போடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனையடுத்து ஐ.சி.சி.யினால் ஜனவரி 24 இற்கு பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்தப் பரிசோதனையில் அஜ்மல் தனது புதிய பந்துவீச்சுமுறை, விதிகளுக்கு அமைவானது என நிரூபிப்பாராகவிருந்தால் அவர்மீதான தடை நீக்கப்படும். அவ்வாறு அவர் பரிசோதனையில் வெற்றிபெறாத பட்சத்தில், தனது பந்துவீச்சு முறையை நிரூபிப்பதற்கு மேலும் ஒரு காலக்கெடு ஐ.சி.சி.யினால் வழங்கப்படும். 

அதேவேளை, 24ஆம் திகதி நடைபெறும் பரிசோதனையின் முடிவில் அஜ்மல் மீதான தடை நீக்கப்பட்டு, அவர் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்த பின்னர், மறுபடியும் நடுவர்களால் அவரது பந்துவீச்சு முறையற்றதாக அடையாளம் காணப்படுமாயின் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை அவர் பந்துவீசுவதற்கு ஐ.சி.சி.யினால் தடை விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .