2025 ஜூலை 09, புதன்கிழமை

அரையிறுதியில் ஜோக்கோவிச்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற உலகின் ஐந்தாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வுடனான குழுநிலைப் போட்டியில் தான் வென்றதன் மூலமும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில் உலகின் 10ஆம் நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னரை உலகின் ஏழாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் வென்றதன் மூலமுமே அரையிறுதிப் போட்டிக்கு ஜோக்கோவிச் தகுதிபெற்றார்.

6-4, 6-1 என்ற நேர் செட்களில், ஸவ்ரேவ்வை ஜோக்கோவிச் வென்றதுடன், 6-7 (2-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இஸ்னரை சிலிச்சும் வென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .