2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆர்சனலை வென்ற டொட்டென்ஹாம்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்சனலுக்கும் இடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, சண் ஹெயுங்-மின், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, ஜோர்ஜினோ விஜ்நால்டும், ஜோயல் மட்டிப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதுடன், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, அயோஸ் பெரேஸ், ஜேமி வார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஷெஃபீல்ட் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலி மக்பேர்ணி பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகியன தலா 24 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கஇ அடிப்படையில் முதலாமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும், இரண்டாமிடத்தில் லிவர்பூலும் காணப்படுகின்றன. 22 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செல்சியும், 21 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X