2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆர்சனலை வென்று அரையிறுதியில் சிற்றி

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே அரையிறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதிபெற்றுள்ளது.

சிற்றி சார்பாக, கப்ரியல் ஜெஸூஸ், றியாட் மஹ்ரேஸ், பிலிப் பொடென், அய்மரிக் லபோர்ட்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X