2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முக்கிய போட்டியில் ரிங்கு விளையாடுவது சந்தேகம்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் வியாழக்கிழமை (26) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள சிம்பாப்வேக்கெதிரான முக்கியமான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ரிங்கு சிங் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

குடும்ப அவசரநிலை காரணமாக ரிங்கு வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (24) பயிற்சியில் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் ரிங்கு இப்போட்டியில் விளையாட முடியாமல் போனால் அபிஷேக் ஷர்மா, இஷன் கிஷன், திலக் வர்மா என தொடர் இடதுகைவீரர்களின் நடுவே ஆரம்பத் துடுப்பாட்டவீரராக சஞ்சு சாம்சனை இந்தியா அணிக்குள் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .