2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் நெதர்லாந்துக்கெதிரான குழு ஏ போட்டியில் நடப்புச் சம்பியன்களான இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியாவின் அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியில் அக்ஸர் பட்டேலுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் அவரை வொஷிங்டன் சுந்தர் அணியில் பிரதியிட்ட நிலையில், குல்தீப் யாதவ்வை அர்ஷ்டீப் சிங் பிரதியிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .