2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

இன்று மூன்றாவது போட்டி

Mithuna   / 2024 ஜனவரி 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் மழையால் முடிவேதும் இல்லாததோடு, இரண்டாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில், தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் தோல்வியை இலங்கை தவிர்க்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் குசல் மென்டிஸிலிருந்து இளம் வீரர் அவிஷ்க பெர்ணாண்டோ, முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக வரையில் துடுப்பாட்டத்தில் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது. இப்போட்டியில் ஷானக அல்லது அவிஷ்க பெர்ணாண்டோவுக்குப் பதில் நுவனிடு பெர்ணாண்டோ களமிறங்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதோடு, அகில தனஞ்சய, பிரமோத் மதுஷன், டுனித் வெல்லலாகே ஆகியோர் ஜெஃப்ரி வன்டர்சே, துஷ்மந்த சமீர, மகேஷ் தீக்‌ஷனவைப் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக சிம்பாப்வே சார்பாக சிகண்டர் ராசா, றயான் பேர்ள், மில்டன் ஷும்பாவிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X