2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இரண்டாவது போட்டியிலும் இலங்கை அதிர்ச்சி தோல்வி

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், 19 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

118 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 13 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி 20 போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 134 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .