Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பெண்கள் அணியுடனான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. விஷ்மி குணரத்ன 39 (43), ஹர்ஷிதா சமரவிக்கிரம 21 (23), ஹசினி பெரேரா 20 (23), அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 15 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 4-1-20-1, கிரந்தி கோட் 3-0-23-1, ஷ்றீ சரணி 4-0-30-1, வைஷ்ணவி ஷர்மா 4-0-16-0, அருந்ததி ரெட்டி 4-0-23-0, அமஞ்சோட் கெளர் 1-0-8-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 122 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. ஜெமிமா றொட்றிகாஸ் ஆட்டமிழக்காமல் 69 (44), ஸ்மிருதி மந்தனா 25 (25), அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் ஆட்டமிழக்காமல் 15 (16), ஷெஃபாலி வர்மா 09 (05) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இனோக றணவீர 3.4-0-17-1, காவ்யா கவிந்தி 3-0-20-1, சாமரி 2-0-16-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகியாக றொட்றிகாஸ் தெரிவானார்.
5 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago