2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: உருகுவேயை வென்ற போர்த்துக்கல்

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 29 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற உருகுவே உடனான குழு எச் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற போர்த்துக்கல், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் புரூனோ பெர்ணாண்டஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற சுவிற்ஸர்லாந்துடனான குழு ஜி போட்டியில் கஸேமீரோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்று இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற தென் கொரியாவுடனான குழு எச் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா வென்றதுடன், கமரூன் மற்றும் சேர்பியாவிக்கிடையேயான குழு ஜி போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X