2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல்: சம்பியனானது குஜராத்

Shanmugan Murugavel   / 2022 மே 29 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) குஜராத் டைட்டான்ஸ் சம்பியனானது.

அஹமதபாத்தில் இன்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே குஜராத் சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்ஸன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், ஆரம்பத்திலிருந்தே யஷ் டயால், அணித்தலைவர் ஹர்டிக் பாண்டியா (3), ரஷீட் கான், சாய் கிஷோர் (2), மொஹமட் ஷமியிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்கு 131 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குஜராத், ஆரம்பத்திலேயே ரித்திமான் சஹா, மத்தியூ வேட்டை பிரசீத் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்டிடம் இழந்தபோதும் ஹர்டிக் பாண்டியா, ஷுப்மன் கில் மூலம் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.

34 ஓட்டங்களுடன் யுஸ்வேந்திர சஹாலிடம் பாண்டியா வீழ்ந்தபோதும் டேவிட் மில்லரின் ஆட்டமிழக்காத 32 (19), கில்லின் ஆட்டமிழக்காத 45 (43) ஓட்டங்களோடு 18.1 ஓவர்களில் குஜராத் வெற்றியிலக்கையடைந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .