Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இடம்பெறவுள்ள உலக கிண்ண பயிற்சி போட்டியில் தென்னாபிரிக்கா - நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து- பங்காளதேஷ் அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் இடையிலான 13-வது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வருகின்ற 5 ஆம் திகதி ஆஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தற்போது பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் இரு நாட்களில் நடந்த பயிற்சி போட்டிகள் கனமழையினால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது . இன்னொரு போட்டி பாதியில் இரத்து செய்யப்பட்டது. இதில் இந்தியா- இங்கிலாந்து போட்டியும் அடங்குகின்றன.
இந்த நிலையில் இன்று (02) இரு பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் ஒரு போட்டியும் தென்னாபிரிக்காவும், நியூசிலாந்தும் சந்திக்கின்றன.
கவுகாத்தியில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் இங்கிலாந்து- பங்காளதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்தநிலையில் நாளையுடன் பயிற்சி போட்டிகள் நிறைவடைகின்றன. இந்திய அணி தனது கடைசி பயிற்சி போட்டியில் நாளை நெதர்லாந்தை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026