2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை யுவதி கணேஸ் இந்துகாதேவி

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்



தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்று, லாகூரில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50 தொடக்கம் 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X