2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிராங்பேர்ட்டிடம் தோற்றது மியூனிச்

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், ஐன்ரச்ட் பிராங்பேர்ட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோல்வியடைந்தது.

மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்தார். பிராங்பேர்ட் சார்பாக, பிலிப் கொஸ்டிக், டிஜிபிறில் சோ, டேவிட் ஏப்ரஹாம், மார்டின் ஹின்டெரெக்கர், கொன்கலோ பசீனியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு  நடைபெற்ற வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்குடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. டொட்டமுண்ட் சார்பாக, தொர்கன் ஹஸார்ட், றபேல் குரெய்ரோ, மரியோ கோட்ஸே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மைன்ஸுடனான போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றிருந்தது. லெய்ப்ஸிக் சார்பாக, திமோ வேர்னர் மூன்று கோல்களையும், மார்செல் சபிட்ஸர், கிறிஸ்தோபர் என்குங்கு, மார்செல் ஹல்ஸ்டென்பேர்க், யூசுஃப் பெளல்சன், நொர்டி முகிலே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .