2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேருக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  2011ஆம் 2012ஆம் கல்வியாண்டுகளுக்கான பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேருக்கு  மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் கொடுப்பனவு வெள்ளிக்கிழமை (11) வழங்கப்பட்டன.

இக்கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்பட்ட  இம்மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.தவராஜா, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X