2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் 7 பேர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்;சேனையில்  தபாலகத்துக்கு முன்பாகவுள்ள வேப்பமரத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று மோதியதால், காயமடைந்த 07 பேர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக அந்த வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று திங்கட்கிழமை (20)  வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்து சம்பவித்தது.
சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாமென   பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பஸ் வண்டிச்  சாரதியை  கைதுசெய்ததுடன், இவ்விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X